Thursday 2nd of May 2024 10:39:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
புரேவி சூறாவளி: யாழ் மாவட்டத்தில் 359 பேர் பாதிப்பு! 7 வீடுகள்  சேதம்!

புரேவி சூறாவளி: யாழ் மாவட்டத்தில் 359 பேர் பாதிப்பு! 7 வீடுகள் சேதம்!


புரேவி சூறாவளி தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் பகுதிகளெங்கும் பரவலாக பெய்து வரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 82 குடும்பங்களை சேர்ந்த 359 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாண - சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

12 மணித்தியாலமாக தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE